ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மகா புஷ்ப யாகம் நிறைவு

Published On 2021-07-26 10:43 IST   |   Update On 2021-07-26 10:43:00 IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 16-ந்தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்கள் கோடி மல்லி பூக்கள், கனகாம்பரம் பூக்கள் ஆகியவற்றால் மகா புஷ்ப யாகம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 16-ந்தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்கள் கோடி மல்லி பூக்கள், கனகாம்பரம் பூக்கள் ஆகியவற்றால் மகா புஷ்ப யாகம் நடந்தது. நிறைவுநாளான நேற்று அதிகாலை கோவில் சுப்ரபாத சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை நடந்தது.

அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்துக்கு உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்தனர். அங்கு தாயாருக்கு நித்யாஹவனம், மகாபிரயாஷ்சிதா ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்ப பிரதிஷ்டை ஆகியவை நடந்தது.

பின்னர் பத்மாவதி தாயாருக்கும், சுதர்சன சக்கரதாழ்வாருக்கும் மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத பிரதான அர்ச்சகர்கள் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்தினர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், மகா புஷ்ப யாகத்தால் கொரோனா தொற்று பரவல் குறைந்து, உலக மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள், என்றார்.

Similar News