ஆன்மிகம்
கோவிந்தராஜ சுவாமி

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 2-வது நாளாக ஜேஷ்டாபிஷேகம்

Published On 2021-07-21 12:36 IST   |   Update On 2021-07-21 12:36:00 IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 2-வது நாளான நேற்று சத கலச ஸ்நாபனம், மகாசாந்தி ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் சத கலச சொப்னம் மற்றும் மகாசாந்தி ஹோமம் நடந்தது. அதன்பிறகு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம், ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்த்தினர்.

பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர், சுவாமியின் கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கவசம் அணிவிக்கப்பட்டது. மாலையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்.

2-வது நாளான நேற்று சத கலச ஸ்நாபனம், மகாசாந்தி ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. அதைத் தொடர்ந்து கோவிந்தராஜ சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி உலா வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News