ஆன்மிகம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பவித்ர உற்சவம்
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) மூலவர் சாரங்கபாணிக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டு 48 நாட்களுக்கு திருமுக மண்டல தரிசன சேவை நடக்கிறது.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் 7 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு பவித்ரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
இதில் உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று குறையவும், விவசாயம், வணிகம் பெருகவும் வழிபாடு நடைபெற்றது. பவித்ரோத்சவத்தின் நிறைவாக நேற்று உதய கருட சேவை நடந்தது. விழாவில் உற்சவர் ஆராவமுத பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் செல்வர் மூர்த்திக்கு தீர்த்தவாரி, மாலையில் உற்சவருக்கு திருமஞ்சனும் நடந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) மூலவர் சாரங்கபாணிக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டு 48 நாட்களுக்கு திருமுக மண்டல தரிசன சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
இதில் உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று குறையவும், விவசாயம், வணிகம் பெருகவும் வழிபாடு நடைபெற்றது. பவித்ரோத்சவத்தின் நிறைவாக நேற்று உதய கருட சேவை நடந்தது. விழாவில் உற்சவர் ஆராவமுத பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் செல்வர் மூர்த்திக்கு தீர்த்தவாரி, மாலையில் உற்சவருக்கு திருமஞ்சனும் நடந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) மூலவர் சாரங்கபாணிக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டு 48 நாட்களுக்கு திருமுக மண்டல தரிசன சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.