ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

Published On 2021-07-16 13:01 IST   |   Update On 2021-07-16 13:01:00 IST
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி  :

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநில அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.

இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்ய வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை கோவிலில் வழக்கம்போல் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை நடக்கும். அதேபோல் கோவிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், எனக் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

Similar News