ஆன்மிகம்
வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய நடராஜப்பெருமானுக்கும் - சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனம்: வெள்ளியம்பலத்தில் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-07-16 10:41 IST   |   Update On 2021-07-16 10:41:00 IST
ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய நடராஜப்பெருமானுக்கும் - சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு ஆனி உத்திரத்தையொட்டி திருமஞ்சன உற்சவம் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய நடராஜப்பெருமானுக்கும் - சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News