ஆன்மிகம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

Published On 2021-07-16 10:00 IST   |   Update On 2021-07-16 10:00:00 IST
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், கொரேனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆனி திருமஞ்சன விழா எளிமையான முறையில் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், கொரேனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆனி திருமஞ்சன விழா எளிமையான முறையில் நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சபா மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம் என 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு சாமி வீதி உலா நடைபெறவில்லை. இருப்பினும் விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கலந்து கொண்டும் சாமியை தரிசனம் செய்தனர்.

Similar News