ஆன்மிகம்
பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா

Published On 2019-03-23 03:44 GMT   |   Update On 2019-03-23 03:44 GMT
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 14-வது ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 14-வது ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

மேலும் கோவில் வளாகத்தில் தினமும் மதியம் திவ்ய பிரபந்த சேவாகாலம் நிகழ்ச்சி நடந்தது. கருடசேவையின்போது சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News