ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான கடந்த 14-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இை-யொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் மண்டபத்தில் எழுந்தருளினர்.
கோவில் அர்ச்சகர், நிர்வாக அலுவலரும், செயல் அலுவலருமான ரோஷினிக்கு செங்கோலும், தக்கார் சங்கருக்கு பாதமும் வழங்கினார். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சங்கர் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலர் ரோஷினியும், சுவாமி பாதத்தை தக்கார் சங்கரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான கடந்த 14-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது.
அன்று இரவு 8 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா நடந்த போது எடுத்த படம்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இை-யொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் மண்டபத்தில் எழுந்தருளினர்.
கோவில் அர்ச்சகர், நிர்வாக அலுவலரும், செயல் அலுவலருமான ரோஷினிக்கு செங்கோலும், தக்கார் சங்கருக்கு பாதமும் வழங்கினார். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சங்கர் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலர் ரோஷினியும், சுவாமி பாதத்தை தக்கார் சங்கரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.