ஆன்மிகம்

நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-03-14 09:47 GMT   |   Update On 2019-03-14 09:47 GMT
நாமக்கல் நரசிம்மசாமி, அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், குடவறைக் கோவில்களான நரசிம்ம சாமி, நாமகிரி தாயார் கோவிலும், அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளன. நரசிம்மர் கோவிலின் முன்புறம் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்ச நேயர் சாமி தேர்த்திருவீதி உலாவரும் வைபவம் நடைபெறும். இந்த ஆண்டின் திருத்தேர் பெருவிழாவானது, இன்று காலை 8.45 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

14-ந் தேதி முதல் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, இரவில், 15 ந் தேதி சிம்ம வாகனம் வீதி உலா, 16-ந் தேதி இரவில் அனுமந்த வாகனம் வீதி உலா, 17-ந் தேதி கருட வாகனம், 18-ந் தேதி சே‌ஷ வாகனம், 19-ந் தேதி யானை வாகனம் வீதியுலா ஆகியன நடைபெற உள்ளன.

20-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், திருமாங்கல்ய தாரணம், திருக்கல்யாணத்தில் பக்தர் கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பிக்கும் வகையில், மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங் காரம் உள்ளிட்டவை நடை பெறுகிறது.

21-ந் தேதி இரவில், குதிரை வாகனம், திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது.

22-ந் தேதியன்று, காலை 8.45 மணிக்கு மேல், 9.15 மணிக்குள் நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாலை 4.30 மணிக்கு மேல் 4.45 மணிக்குள், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் விழாவும் நடைபெறுகிறது. 23-ந் தேதி காலை 10 மணிக்கு மேல், தீர்த்தவாரி மற்றும் சத்தாவரணம், கஜலட்சுமி வாகன வீதியுலா, 24-ந் தேதி வசந்த உற்சவம், பல்லக்கு புறப்பாடு, 25-ந் தேதி விடையாற்றி உற்சவம், 26-ந் தேதி புஷ்ப பல்லக்கு, 27-ந் தேதி, நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. 28-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் மங்கள இசையுடன் திருத்தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News