ஆன்மிகம்
மாதேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சுத்தூர் கிராமத்தில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மாதேஸ்வரர் கோவிலில், சுத்தூர் மடம் சார்பில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க மகாசுவாமி, கொல்லாபுரத்தின் திகம்பர ஜெயின மடத்தின் லட்சுமி சேனா பட்டாரகா சுவாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரில் மூலவரான மாதேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் வெள்ளத்தில் மாதேஸ்வரர் வீற்றிருந்த தேர் முதலில் வலம் வர, அதனைத்தொடர்ந்து ஆதிகுருசிவராத்திரீஸ்வரரின் உருவச்சிலைகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் அணிவகுத்து வந்தன. தேரோட்டத்தை காண வந்த திரளான பக்தர்கள் கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் புனித நீராடிவிட்டு பின்னர் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தில் சாமனூர் சிவசங்கரப்பா, மண்டியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவராமேகவுடா, மந்திரிகள் பண்டப்பா காசம்பூர், வெங்கடராவ் நாடகவுடா உள்பட பலர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தை துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க மகாசுவாமி, கொல்லாபுரத்தின் திகம்பர ஜெயின மடத்தின் லட்சுமி சேனா பட்டாரகா சுவாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரில் மூலவரான மாதேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் வெள்ளத்தில் மாதேஸ்வரர் வீற்றிருந்த தேர் முதலில் வலம் வர, அதனைத்தொடர்ந்து ஆதிகுருசிவராத்திரீஸ்வரரின் உருவச்சிலைகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் அணிவகுத்து வந்தன. தேரோட்டத்தை காண வந்த திரளான பக்தர்கள் கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் புனித நீராடிவிட்டு பின்னர் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தில் சாமனூர் சிவசங்கரப்பா, மண்டியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவராமேகவுடா, மந்திரிகள் பண்டப்பா காசம்பூர், வெங்கடராவ் நாடகவுடா உள்பட பலர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.