ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

Published On 2019-01-16 03:14 GMT   |   Update On 2019-01-16 03:14 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் முக்கியமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தியுடன் வீதி உலா நடக்கிறது.

வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தைப்பூச தீர்த்தவாரி விழா நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது.

பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்து அடைகிறார்கள்.

தொடர்ந்து 22-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜ திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது.
Tags:    

Similar News