ஆன்மிகம்
புரட்டாசி மாத பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு
புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சபரிமலையில் ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடியது. அதைத்தொடர்ந்து நடந்த தேவ பிரசன்னத்தில் கூறப்பட்ட அருள்வாக்குப்படி பரிகார பூஜைகள் நடந்தது. இந்த பரிகார பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடந்தது.
நேற்று முன் தினம் இரவு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.
மீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 22- ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
இந்நாட்களில், தேவ பிரசன்ன பரிகாரத்தின் படி கூவி அழைத்து பிராயசித்தம் செய்யும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.
நேற்று முன் தினம் இரவு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.
மீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 22- ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
இந்நாட்களில், தேவ பிரசன்ன பரிகாரத்தின் படி கூவி அழைத்து பிராயசித்தம் செய்யும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.