ஆன்மிகம்
தாமிரபரணி ஆற்றில் துறவிகள் புனித நீர் ஊற்றிய காட்சி.

தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு ஜடாயு தீர்த்தத்தில் படித்துறை கட்ட பூமி பூஜை

Published On 2018-07-27 08:07 GMT   |   Update On 2018-07-27 08:07 GMT
நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள்.

இதற்காக அரசு சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் தாமிரபரணி நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தாமிரபரணி நதியில் புஷ்கர விழா கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் பல்வேறு இடங்களை சுற்றி பார்வையிட்டனர். புஷ்கர விழாவிற்காக தாமிரபரணி நதி கரையில் படித்துறைகள், தாமிரபரணிதேவி சிலை உள்பட பல அடிப்படை கட்டமைப்புகள் கட்ட வேண்டும் என்றும் துறவிகள் கூட்டமைப்பினர் அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் துறவிகள் கூட்டமைப்பு மற்றும் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பாக அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி நதியின் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட பூமிபூஜை இன்று காலை நடந்தது.


நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட துறவிகள் பூமி பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

இதில் நாங்குநேரி வானமாமலை ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஜீயர், கொங்கு மண்டல நாராயணஜீயர், திருச்சி ஸ்ரீரங்கம் பவுன்புகரபுரம் ஜீயர், பெருங்குளம் செங்கோல் ஆதினம், துறவிகள் சங்க தலைவர் ராமானந்தா சுவாமிகள், நெல்லை பக்தானந்த சுவாமி மற்றும் எட்டெழுத்து பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பூமிபூஜையை நடத்தினர்.

பின்னர் ஜடாயு தீர்த்தத்தில் தண்ணீர் தெளித்து பல்வேறு அடிப்படை பணிகளுக்கான தொடக்க விழாவையும் நடத்தினர்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News