ஆன்மிகம்
கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந் திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது
மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி, கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். இங்குள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் ஆடி மாதம் வரும் ஆடிப்பெருந்திருவிழா. இந்த வருடத்திற்கான விழா கோவிலில் வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று இரவு அன்னவாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் 20-ந்தேதி காலை தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.
23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தாயார்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்பு காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள்.
28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அன்று இரவு அன்னவாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் 20-ந்தேதி காலை தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.
23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தாயார்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்பு காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள்.
28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.