ஆன்மிகம்
தேனிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான தேனிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று தேனிமலை முருகன் கோவிலாகும். தேனீக்கள் அதிகம் இங்கு உள்ளதால் இது தேனிமலை எனக்கூறப்படுகின்றது. புதுக்கோட்டை மகாராஜாவின் தீராத வயிற்று வலியை தீர்த்த ஸ்தலம் என வரலாற்று சாசனத்தில் உள்ளது.
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு நிகராக தேனிமலை கிரிவலம் சிறப்புடையது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேல புதிதாக மண்டபம் கட்டப்பட்டுள்ளது கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜை நடத்தப்பட்டு நேற்று காலை 9.40மணிக்கு பிள்ளை யார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் தேனிமலை ராஜப்பக்குருக்கள்,பாபு குருக்கள் போன்ற சிவாச்சா ரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பத்தில் புனித நீர் ஊற்ற கருடபகவான் எப்போது வருவார் என சிவாச்சாரியார்கள்,பக்த கோடிகள் அனைவரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். ஒரு சில கோவில்களில் கருடன் வரும் ஒரு சில கோவில்கள் வராமல் இருந்தாலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த தேனிமலை கோவிலில் ஒரு கருடன் முன்னே வர அதனை பின் தொடர்ந்து 12கருட பகவான்கள் வர சிவாச்சாரியார்களும் பக்தர்களும் ஆச்சரியத்துடன் காணாத காட்சியாக இருந்தது. சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத்தலைவர் ராமசாமி, பரம்பரை அறங்காவலர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் நகரத்தார்கள் செய்திருந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு நிகராக தேனிமலை கிரிவலம் சிறப்புடையது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேல புதிதாக மண்டபம் கட்டப்பட்டுள்ளது கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜை நடத்தப்பட்டு நேற்று காலை 9.40மணிக்கு பிள்ளை யார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் தேனிமலை ராஜப்பக்குருக்கள்,பாபு குருக்கள் போன்ற சிவாச்சா ரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பத்தில் புனித நீர் ஊற்ற கருடபகவான் எப்போது வருவார் என சிவாச்சாரியார்கள்,பக்த கோடிகள் அனைவரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். ஒரு சில கோவில்களில் கருடன் வரும் ஒரு சில கோவில்கள் வராமல் இருந்தாலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த தேனிமலை கோவிலில் ஒரு கருடன் முன்னே வர அதனை பின் தொடர்ந்து 12கருட பகவான்கள் வர சிவாச்சாரியார்களும் பக்தர்களும் ஆச்சரியத்துடன் காணாத காட்சியாக இருந்தது. சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத்தலைவர் ராமசாமி, பரம்பரை அறங்காவலர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் நகரத்தார்கள் செய்திருந்தனர்.