ஆன்மிகம்

ஈரோட்டில் நாளை ஸ்ரீ ஜெகந்நாதர் தேர்த்திருவிழா

Published On 2016-12-16 16:01 IST   |   Update On 2016-12-16 16:01:00 IST
ஈரோட்டில் ஸ்ரீ ஜெகந்நாதர் தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த திருவிழாவின் சிறப்பை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ஒடிசா மாநிலம் பூரியில் ஸ்ரீ ஜெகந்நாதர் (ஸ்ரீகிருஷ்ணர்) தேர்த்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. அந்த தேர்த்திருவிழா தற்போது ஈரோட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 2-ம் ஆண்டு விழாவாக இந்த தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

அன்று மாலை 3 மணிக்கு பிரப் ரோட்டில் உள்ள செங்குந்தர் நர்சரி பள்ளியில் ஜெகந்நாதர் தேர் பவனி தொடங்கி பெருந்துறை மெயின் ரோடு வழியாக மாலை 6 மணியளவில் குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் தேர் நிலை சேருகிறது.

இரவு 7 மணிக்கு கோவை இஸ்கானின் தலைவர் பக்தி வினோத சுவாமி மகராஜ், ஸ்ரீ ஜெகந்நாதர் லீலைகள் பற்றி உபன்யாசம் செய்கிறார்.

தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு விசே‌ஷ பூஜையும் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

இத்தேர்த்திருவிழா- ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஈரோடு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News