ஆன்மிகம்
100 ஆண்டு பழமை வாய்ந்த வெள்ளோடு சுயம்பு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
100 ஆண்டு பழமை வாய்ந்த வெள்ளோடு சுயம்பு மாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை தொடங்கியது.
சென்னிமலை அடுத்துள்ள வெள்ளோட்டில் 100 ஆண்டுள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29-ம் தேதி இரவு கோவிலின் முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் அதிகாலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.
மேலும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை தொடங்கியது.
காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவிலை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாரியம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நடு இரவு கம்பம் பிடுங்கினர். இன்று மாலை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29-ம் தேதி இரவு கோவிலின் முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் அதிகாலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.
மேலும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை தொடங்கியது.
காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவிலை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாரியம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நடு இரவு கம்பம் பிடுங்கினர். இன்று மாலை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.