ஆன்மிகம்
பெருமாள்

திருவோண நட்சத்திரமான இன்று சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2021-09-17 04:09 GMT   |   Update On 2021-09-17 04:09 GMT
இந்த மந்திரத்தை திருவோண நட்சத்திர தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் உச்சரித்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற முடியும்.
திருவோண நட்சத்திர தினத்தன்று பெருமாளின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்ல வேண்டும். இதுதான் அந்த மந்திரம்

“ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
 ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய நமக”

இந்த மந்திரத்தை திருவோண நட்சத்திர தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் உச்சரித்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற முடியும்.
இப்படி ஏகாதசி சிறப்புகளும், திருவோண நட்சத்திரத்தின் மகிமைகளும் கொண்ட தினமாக நாளைய தினம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நாளில் புரட்டாசி முதல் நாள் தொடங்குவது மிக மிக விஷேசமாகும். எனவே நாளை காலையில் அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள்.

ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். இன்று காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
Tags:    

Similar News