ஆன்மிகம்
சிவன்

பூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-08-10 04:28 GMT   |   Update On 2020-08-10 04:28 GMT
காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து பூசம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம:
சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம:
சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

பொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய
வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News