ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

ஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

Published On 2020-05-27 05:44 GMT   |   Update On 2020-05-27 05:44 GMT
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன்.
ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். தினமும் `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.

`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்'

என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். 
Tags:    

Similar News