ஆன்மிகம்
காலபைரவர்

அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் காலபைரவாஷ்டகம்

Published On 2020-04-09 09:33 GMT   |   Update On 2020-04-09 09:33 GMT
இந்த ஸ்லோகம் தினமும் ஒரு முறை சொல்லி வழிபட்டு வந்தால் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து சகல செல்வங்களும் பெற்று வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்.
சிவ பெருமானுக்கு நிகரான கால பைரவரை இந்த ஸ்லோகம் தினமும் ஒரு முறை சொல்லி வழிபட்டு வந்தால் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து சகல செல்வங்களும் பெற்று, 16 பேறுகளும் உண்டாகி சுக போக வாழ்க்கையை வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்.

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

பொருள்: இந்திரன் வணங்கும் திருவடிகளையும், சந்திரனை தரித்தவரும், நாரதர் போன்ற யோகியர்களால் வணங்கப்பட்டவரும், திகம்பரருமான காசிநகரத்தில் அருள் பாலிக்கும் காலபைரவரை வணங்குகிறேன்.

பானுகோடி பாஸ்வரம் பாவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
கால காலமம்புஜாக்ஷ மஸ்த ஸூன்ய மக்ஷரம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே!!

பொருள்: பல ஆயிரம் சூரியன்களை போல பிரகாசமானவர், சம்ஸார கடலிலிருந்து கடைத்தேற்றுபவர், நீல கண்டர், விரும்பியதை அருள்பவர், முக்கண்னர், காலகாலர், தாமரையை ஒத்த கண்களை உடையவர், பரிபூரண அக்ஷரமானவர், காசியை காவல் காக்கும் தெய்வமான காலபைரவரை வணங்குகிறேன்.

ஸூலடங்கபாச தண்ட பாணிமாதி காரணம்
ச்யாமகாய மாதிதேவமக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே!!

பொருள்: சூலம், உளி, பாசம், தண்டம் இவைகளை கைகளில் பூண்டு ஆதி காரணமாய், கருமை நிற மேனியராய், குறையாத அக்ஷரமாய், பயங்கர நெறிமுறைகள் கொண்ட பிரபுவாய், விசித்திரமான தாண்டவம் புரிபவராய் திகழும் காசி காலபைரவரை வணங்குகிறேன்.

புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விரக்ரஹம்
நிக்வணன் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

பொருள்: புத்தி, மோட்சம் இரண்டையும் அருள்பவராய்,அழகிய உருவங்கொண்டவராய், அடியார்களிடத்தில் அன்பு கொண்டவராய், உறுதியாய் அனைத்து உலகமும் வடிவாக அமைந்தவராய், தங்கத்தால் ஜொலிக்கும் அரைச்சதங்கையில் ஒலியெழுப்புபவராய் காசியை தாயகமாக கொண்ட காலபைரவரை வணங்குகிறேன்.

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்க நாஸகம்
கர்மபாஸமோசகம் ஸுஸர்மதாயகம் விபும்
ஸ்வர்ணவர்ண கேஸபாஸ சோபிதாங்க நிர்மலம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

பொருள்: தர்மம் என்கிற பாலத்தை பாதுக்காப்பவராய், அதர்மத்தை அழிப்பவராய், கர்மம், பந்தம் இல்லை என்றாக்குபவராய், எங்கும் நிறைந்து நலம் அருளும் தங்க நிற கேசம் கொண்டவராய், தூய வடிவினராய் இருக்கும் காசி காலபைரவரை வணங்குகிறேன்.

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
நித்ய மத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்பநாசனம் கரால தம்ஷ்ட்ரபூஷணம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

பொருள்: வைரம் இழைத்த பாதுகைகள் அணிந்திருப்பதால் மிகவும் அழகாயிருக்கின்றன. அவர் நித்யமான இஷ்ட தெய்வம். இரண்டாகக் கொள்ளப்படாதவர், எமனின் கொட்டத்தை அடக்கியவர். பயங்கர தெற்றிப்பற்கள் இருந்தாலும் அழகாயிருக்கின்றன. அத்தகைய காசி காலபைரவரை வணங்குகிறேன்.

அட்டஹாஸபின்ன பத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

பொருள்: பிரம்மனின் அண்ட கோச கூட்டை அட்டகாசம் செய்து உடைத்தவருமான, பார்த்தவுடன் பாவங்களை ஒழிப்பவருமாய், பயங்கரமான கட்டளைகளை கொண்டவருமாய், மண்டை ஓட்டை மாலையாக அணிந்து அஷ்டமா சித்திகளை அருளும் காசி காலபைரவரை வணங்குகிறேன்.

பூதஸங்கநாயகம் விசால கீர்த்திதாயகம்
காசிவாஸிலோக புண்யபாப ஸோதகம் விபும்
நீதிமார்ககோவிதம் புராதநம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

பொருள்: பூத கணங்களுக்கு நாயகராக, பரந்த கீர்த்தி தருபவர். காசியில் வாழும் மக்களின் பாவ, புண்ணியங்களை ஆராய்பவராக எங்கும் இருப்பவர். நீதி அறிந்த புராதன உலகத்தலைவரான காசி காலபைரவரை வணங்குகிறேன்.

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்யானமுக்திஸாதகம் விசித்ரபுண்யவர்த்தனம்
சோகமோஹ லோபதைன்யகோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்ந்திம்த்ருவம்.

பொருள்: இத்தகைய அழகிய காலபைரவாஷ்டகத்தைப் படிப்பவர்கள் ஞானம், முக்தியுடன் பற்பல புண்ணியங்களையும் அடைவார்கள். துக்கம், மோகம், லோபம், ஏழ்மை, கோபம், தாபம் நீங்க பெற்று காலபைரவர் சந்நிதியை நிச்சயம் அடைவார்கள்.
Tags:    

Similar News