ஆன்மிகம்
மகாலட்சுமி

கோரிக்கைகளை நிறைவேற்றும் மகாலட்சுமியின் தன ஆகர்ஷண மந்திரம்

Published On 2020-03-24 07:34 GMT   |   Update On 2020-03-24 07:34 GMT
மகாலட்சுமியிடம் உரையாடி, உங்களின் கோரிக்கைகளை வைக்க வேண்டுமா? உங்களின் வேண்டுதல் மகாலட்சுமியின் செவிகளில் விழுவதற்கான சிறப்பான மந்திரம் ஒன்று இருக்கின்றது.
மகாலட்சுமியிடம் உங்களது குறைகளை நேரடியாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எப்படிப்பட்ட குறைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர்தான் அந்த லட்சுமி தேவி. உங்களின் வேண்டுதல் மகாலட்சுமியின் செவிகளில் விழுவதற்கான சிறப்பான மந்திரம் ஒன்று இருக்கின்றது.

மகாலட்சுமி வழிபாடு என்றாலே அதை வெள்ளிக்கிழமை அன்று, நாம் எல்லோரும் செய்வது வழக்கம். நம்முடைய வீட்டை எப்போதும் போல் சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றிய பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

மகாலக்ஷ்மியை மனதார நினைத்து, மனம் உருகி வேண்டி, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வாரம்தோறும் இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை அன்று 108 முறை உச்சரித்தால் மிகவும் நல்லது. முடியாதவர்கள் பௌர்ணமி தினத்தன்று, மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மகாலட்சுமியின் மந்திரம் இதோ..

தன ஆகர்ஷன மந்திரம்:

ராஜ வஸ்ய. தன வஸ்ய. புருஷ வஸ்ய.
ஸ்திரீ வஸ்ய. புத்ர வஸ்ய. சர்வ சம்பத் வஸ்ய.
நாகலோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜிவ பிராணிகளும்
உன் வசமானார் போல்
எங்கள் குடும்ப வசமாக வஸ்ய வஸ்ய ஓம் சுவாஹா! !

மந்திரத்தை அனாவசியமாக உச்சரிக்கக் கூடாது. மகாலட்சுமி தாயாரின் முன்பு தீபம் ஏற்றி வைத்த பின்பே உச்சரிக்க வேண்டும். பிழையில்லாமல் உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

Tags:    

Similar News