ஆன்மிகம்
சிவன்

நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் சிவன் மந்திரம்

Published On 2020-03-23 06:20 GMT   |   Update On 2020-03-23 06:20 GMT
சிவபெருமானின் இந்த மந்திரத்தை சொல்வதால் நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். ஈசனின் ஆசீர்வாதத்தை வரமாக பெறமுடியும்.
நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த சிவபெருமானின் மூலமந்திரத்தை நாமும் தெரிந்து கொண்டு தினம்தோறும் உச்சரிப்பது தானே அழகு. உங்களுக்கான சிவபெருமானின் மூல மந்திரம் இதோ..

சிவபெருமான் மூல மந்திரம்:

“ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா ”

இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் பதினோரு முறை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும். நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். ஈசனின் ஆசீர்வாதத்தை வரமாக பெறமுடியும். தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். புகழின் உச்சிக்கு செல்லலாம். துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது. நம் மனதை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் காமம், குரோதம், பற்று, பேராசை, அகங்காரம் இவைகள் அனைத்தும் நீங்கிவிடும். மனதில் எந்தவிதமான கெட்ட எண்ணமும் இல்லாதவர்கள், அந்த ஈசனின் ஆசியை பெற்றவர்கள் தானே. தினம்தோறும் உங்களால் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றாலும் பிரதோஷ காலத்திலாவது பதினோரு முறை உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். மந்திரத்தை உச்சரிக்கும்போது பிழையில்லாமல் உச்சரிப்பது அவசியம்.
Tags:    

Similar News