ஆன்மிகம்
வராஹி

வராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும்

Published On 2020-03-05 04:42 GMT   |   Update On 2020-03-05 04:42 GMT
தன் பக்தர்களை காக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும். மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.

தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.

மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.

மூல மந்திரம் :


ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”

பூஜை முறைகள் :

வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன் மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம் தொழில் விருத்தி மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

Tags:    

Similar News