ஆன்மிகம்
கிருஷ்ணன்

மழலை வரம் கிட்ட குடும்பம் மேன்மையுற ஸ்லோகம்

Published On 2020-02-18 05:17 GMT   |   Update On 2020-02-18 05:17 GMT
இத்துதியை கண்ணனின் திருவுருமுன் பக்தியுடன் படித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும்; குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.
கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்
வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி க்ருஷ்ண துர்லபம்
யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம்

ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்

பொதுப் பொருள்:

கதம்பப் பூக்களை காதில் குண்டலமாக தரித்தவனே... செழுமிய கன்னங்கள் ஒளிர காட்சி தரும் பேரழகனே... கோபியர்களுக்கு என்றென்றும் நாயகனாக விளங்குபவனே... கிடைத்தற்கரிய பெறும் பேறான இனிய கண்ணனே நமஸ்காரம். நந்தகோபன் யசோதை கோபியர் என்று அனைவருக்கும் பேரானந்தத்தை அருளிய கண்ணா உன் பிஞ்சுத் திருவடிகளுக்கு என் நமஸ்காரம்.

இத்துதியை கண்ணனின் திருவுருமுன் பக்தியுடன் படித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும்; குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.
Tags:    

Similar News