ஆன்மிகம்
பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம்

பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம்

Published On 2019-10-30 08:04 GMT   |   Update On 2019-10-30 08:04 GMT
பிரிந்திருக்கும் தம்பதியரை சேர்ந்து வாழ வைக்கும் மந்திரம் இது. கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
கணவனை பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது. தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

ஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும். அதாவது தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு அந்த குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)

மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை 48 நாட்கள் ஜபித்துவர பலன் நிச்சயம்.
Tags:    

Similar News