ஆன்மிகம்

வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய முருகன் ஸ்தோத்திரம்

Published On 2019-04-05 13:00 IST   |   Update On 2019-04-05 13:00:00 IST
இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி

வீர வடிவேலனாகிய முருகப்பெருமானின் பெருமையை கூறும் தமிழ் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பதது சிறப்பானதாகும். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் முருகபெருமான் படத்திற்கு வாசமுள்ள மலர்களை சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிய பின்பு இந்த ஸ்தோத்திரத்தை 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்கள் தொழில், வியாபார இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். வீட்டில் வீண் பொருள் விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலை உயரும்.

Similar News