முக்கிய விரதங்கள்

திருமணமாகாத கன்னிப் பெண்கள் இன்று அனுஷ்டிக்க வேண்டிய கதளி கவுரி விரதம்

Published On 2023-05-23 04:33 GMT   |   Update On 2023-05-23 04:33 GMT
  • திருமணமான பெண்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து தம்பதிகளாக கதளி கவுரி பூஜை செய்யலாம்.
  • கணவருக்கு பணி இருக்கும் பட்சத்தில் மனைவி தனியாக இந்த பூஜையை செய்யலாம்.

வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி திதியன்று பெண்கள் கதளி கவுரி விரதம் இருக்க வேண்டிய தினமாகும். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விரதம் தினமாகும். திருமணமாகாத கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருப்பது நல்லது. திருமணமான பெண்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து தம்பதிகளாக கதளி கவுரி பூஜை செய்யலாம். கணவருக்கு பணி இருக்கும் பட்சத்தில் மனைவி தனியாக இந்த பூஜையை செய்யலாம்.

பூஜை செய்பவர்கள் இன்று மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிக்குள் இந்த கதளி கவுரி பூஜையை செய்யலாம். கதளிவருசம் என்னும் வாழை மரத்தின் அடியில் அல்லது வாழை இலையின் மீது வைத்து சிவனுடன் கூடிய அம்மனை கவுரி என்று ஆவாஹனம் செய்து சிவப்பு பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜையில் 100-க்கும் குறையாமல் வாழைப்பழங்கள் நிவேதனம் செய்து அவற்றை அன்றோ அல்லது மறுநாளோ கவுரி என்னும் எட்டு வயதுக்குள்ள பெண் குழந்தைகளுக்கு தந்து சாப்பிடச் செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் இவ்வாறு கைகூப்பி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

கதளி கவுரி விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் ஜாதகத்தில் சுக்ர கிரகத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமையின்மை போன்ற தோஷங்கள் இருந்தால் விலகி விடும். திருமணம், குழந்தை செல்வம், குடும்பத்தில் ஒற்றுமை போன்ற நன்மைகள் கிட்டும் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

Tags:    

Similar News