ஆன்மிகம்
சிவபெருமான் நந்தி

இன்று ஐப்பசி மாத பிரதோஷம்... விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்...

Published On 2021-10-18 01:34 GMT   |   Update On 2021-10-18 01:34 GMT
பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
ஐப்பசி மாதம் என்பது தமிழ் மாதங்களிலே விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். காவிரியில் துலா ஸ்தானக் கட்டம் என்றே உள்ளது. மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் துலா ஸ்தானக் கட்டம் என்ற ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, சிவபெருமானை தரிசிப்பது மகா புண்ணியம் ஆகும். அதனால் தனம், தானியம் பெருகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும்.

பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையில், மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
Tags:    

Similar News