ஆன்மிகம்
சிவலிங்கம், நந்தி

சிந்தனைகளில் வெற்றி பெற நந்தியை விரதம் இருந்து வழிபடுவோம்

Published On 2021-08-05 06:00 GMT   |   Update On 2021-08-05 08:40 GMT
நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வருடத்தில் 365 நாட்களுமே நந்தியை விரதம் இருந்து வழிபட்டு வருவதில் தவறில்லை. ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால் விரதம் இருந்து பிரதோஷ நாளில் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விரதம் இருந்து வழிபட்டால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

திங்கட்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும்.

செவ்வாய்க்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் உணவுப் பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் பெருகும்.

புதன்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் கல்வியில் விருத்தி உண்டாகும்.

வியாழக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் படிப்பில் இருந்த தடை அகலும். புத்திரப்பேறு உருவாகும்.

வெள்ளிக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் செல்வ விருத்தியும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

சனிக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
Tags:    

Similar News