ஆன்மிகம்
விஷ்ணு லட்சுமி

சித்திரை மாதத்தில் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபடலாம்

Published On 2021-05-08 01:13 GMT   |   Update On 2021-05-08 01:13 GMT
சித்திரை மாதத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம் என்று பார்க்கலாம்.
* சித்திரை மாதத்தின் முதல் நாள்தான், பூமியை பிரம்மன் படைத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

* சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

* சித்ரா பவுர்ணமி அன்று, நெய்தீபம் ஏற்றிவைத்து குபேரனையும், அவரது மனைவி சித்ராதேவியையும் வழிபட்டால் செல்வம் சேரும். சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணியம் சேரும்.

* சித்திரை மாத பரணி நட்சத்திரத்தில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடை நீங்கும்.

* சித்திரை மாத மூல நட்சத்திரம் அன்று, லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

* சித்திரை மாத வளர்பிறை திருதியை அன்று, அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் சிறிதளவு பொன் அல்லது உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

* சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில், அன்னாபிஷேகம் நடைபெறும்.

* சித்திரை மாத திருதியை நாளில்தான் மகாவிஷ்ணு, மச்ச அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில்தான், லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்கிறது. அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

* சித்திரை மாத சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.
Tags:    

Similar News