ஆன்மிகம்
விநாயகர்

கஷ்டங்கள் தடைகள் நீங்க சதுர்த்தி திதியில் விநாயகர் விரத வழிபாடு

Published On 2021-04-30 05:23 GMT   |   Update On 2021-04-30 05:23 GMT
விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். விநாயகரை சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.
விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி திதியில், சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை விலகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (வளர்பிறை சதுர்த்தி) சதுர்த்தி ஆகும். புரட்டாசி மாதம் வளர்பிறை, அஷ்டமி தினம் முதல், ஓராண்டுக்கு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால், உடல் வலிமை உண்டாகும்.

பொதுவாகவே, புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் எந்த விரதம் இருந்தாலும், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். விநாயகர் என்பவர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம். எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.அதனால் தான் சங்கடஹர சதுர்த்தி என்கிறார்கள்.
Tags:    

Similar News