ஆன்மிகம்

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் சிறப்புகள்

Published On 2017-10-13 15:31 IST   |   Update On 2017-10-13 15:31:00 IST
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.
புரட்டாசி சனிக்கிழமை அரிதாகும். அதிலும் திருப்பதி வெங்கடேஷ பெருமாளுக்கு ஏற்ற தினம். சிலர் சனிக்கிழமை விரதம் இருந்து மாவிளக்கேற்றி பூஜை செய்வார்கள். பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்து வஸ்திரம் வங்கி கொடுப்பார்கள்.

ஒரு கப் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து வடித்து மாவு செய்து கொள்ள வேண்டும். மாவின் அளவே வெள்ளபொடி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சிறிது பால் ஏலத்தூள் சேர்த்து கலந்து இரண்டு கிண்ணங்கள் செய்து அதில் திரிபோட்டு நெய்விட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

ஒரு தாம்பாளத்தில் சுற்றிலும் சந்தானம், குங்குமப் பொட்டு வைத்து அதில் மாவை கோபுரம் போல் கட்டி கிண்ணங்களை வைக்க வேண்டும். பூஜை சாமான்கள் முன்பு பூஜைக்கு குரியது போல் வைத்து கொள்ள வேண்டும். வெங்கடேஷ பெருமாள் படம் வைத்து ஸ்ரீ வெங்கடேஷ அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

Similar News