ஆன்மிகம்
நாச்சிகுளம் பள்ளிவாசலில் ஐம்பெரும் விழா

நாச்சிகுளம் பள்ளிவாசலில் ஐம்பெரும் விழா

Published On 2020-12-24 04:49 GMT   |   Update On 2020-12-24 04:49 GMT
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு ஜமாத் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார்.
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு ஜமாத் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார். காஜி யூசுப் நாட்டாண்மை நாகூர்பிச்சை, செயலாளர் நாகூர் அனிபா, இப்ராகிம் அலி யூசிக்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் காதர் மைதீன் வரவேற்றார்.

ஜனாப் சலீம், ஜனாப் அப்பாஸ் கனி, துணைச் செயலாளர் ஜாகிர்உசேன், பொருளாளர் சலீம்சேட் ஆகியோர் இப்பகுதி பள்ளிவாசலில் தொடர்ந்து பணியாற்றிய ஜெய்னுல் ஆப்தீன் மஹ்லரி, சையது இப்ராகிம், நிக்மத்துல்லாஹ் ரஹீம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கினர். மதராஸ் மாணவ-மாணவிகள் சமூக சிந்தனை, தேசப்பற்று, தொழுகை குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக வங்கி முன்னாள் முதுநிலை மேலாளர் வீரராகவன், கிராம தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் சுகுமாறன், மேட்டுப்பாளையம் சதக்கத்துல்லாஹ் மக்தூமி ஆகியோர் மதநல்லிணக்கம் குறித்து பேசினர். ஜனாப் சலீம்சேட் நன்றி கூறினார்.
Tags:    

Similar News