ஆன்மிகம்
இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழா

இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழா

Published On 2020-11-08 04:06 GMT   |   Update On 2020-11-08 04:06 GMT
கோட்டார்- இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசல் அன்னை செய்யது அலி பாத்திமா(ரலியுல்லா) ஆண்டு பெருவிழா நடந்தது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்த பின் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கோட்டார்- இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசல் அன்னை செய்யது அலி பாத்திமா(ரலியுல்லா) ஆண்டு பெருவிழா நடந்தது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்த பின் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர், கோட்டார்-இளங்கடை முஸ்லிம் சமுதாய தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் இப்ராகிம், ஆலோசகர் ஹாஜி பாபு, உறுப்பினர்கள் அத்தீக், ஹபீபுதீன் ஆபீம், ஆப்தீன், சங்கம் அப்துல் காதர், பாவா சாகிப் பக்கர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமுதாய அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News