தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவு மார்க்க பேருரைகள், மவுலிது ஓதுதல், ஞானமுற்றம் நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மார்க்க பேருரைகள் நடக்கின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப்புகழ்ச்சி பாடுதல் 9-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார் கள்.
தொடர்ந்து அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல், 12-ந்தேதி இரவு 7.30 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.