ஆன்மிகம்
பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க விழா

பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க விழா

Published On 2020-01-07 06:44 GMT   |   Update On 2020-01-07 06:44 GMT
பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் சமூக நல்லிணக்க ஐம்பெரும் விழா பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் நடைபெற்றது.
பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் சமூக நல்லிணக்க ஐம்பெரும் விழா பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் நடைபெற்றது.

வட்டார உலமா சபைத் தலைவர் வலியுல்லா தலைமை தாங்கினார். பரமக்குடி வட்டார அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்கள் முன்னிலை வகித்தனர்.

வட்டார உலமா சபை செயல் தலைவர் ஜலாலுதீன் வரவேற்றார். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மதுரை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணிய சுவாமிகள், சிவகங்கை மறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் மாணாக்கர் பணிக்குழு செயலாளர் பிரிட்டோ ஆகியோர் பேசினர்.

குரான் ஓதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்டார உலமா சபை செயலாளர் அப்துல் வஹாப் நன்றி கூறினார்.

விழாவில் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் வட்டாரத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News