ஆன்மிகம்
கடலூரில் சந்தனக்கூடு ஊர்வலம்

கடலூரில் சந்தனக்கூடு ஊர்வலம்

Published On 2019-10-10 03:47 GMT   |   Update On 2019-10-10 03:47 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் இறைநேசர் சைய்யதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்காவின் 214-வது கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் இறைநேசர் சைய்யதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்காவின் 214-வது கந்தூரி விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 2-வது நாளான நேற்று மாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

தர்காவில் இருந்து மாலை 6 மணிக்கு நெல்லிக்குப்பம் ரபாய் ஜமா குழுவினரின் ராத்திபு உடன் ஊர்வலம் புறப்பட்டு மஞ்சக்குப்பத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. இதன்பிறகு தர்காவுக்கு பக்தர்கள் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. தங்களின் வேண்டுதல நிறைவேறியவர்கள் நேர்ச்சை வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து பக்தி கச்சேரி நடைபெற்றது. விழாவில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தர்கா நிர்வாகிகளும், சாதி, சமய வேறுபாடின்றி பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

3-வது நாளான இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் விளக்கேற்றுதல் நிகழ்ச்சியும், அனைத்து மதத்தவருக்கும் அன்னதானம் வழங்குதலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா உரிமையாளர் அமானுல்லாஷரீப் மற்றும் அவரது சகோதரர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News