ஆன்மிகம்

நன்றி மறந்த ஸபா நாட்டு மக்கள்

Published On 2016-08-01 10:41 IST   |   Update On 2016-08-01 10:41:00 IST
மன்னிப்பளிக்கும் இறைவன் பாவமன்னிப்புக் கேட்காமல் புறக்கணிப்பவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான்.
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் சுலைமான் (அலை) அவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து, ஓரிறைக் கொள்கையை ஏற்ற ஸபா நாட்டின் அரசி பல்கீஸ், தனது நாட்டிற்குத் திரும்பிய பின் மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தினார்.

சூரியனை வணங்குவதைக் கைவிட்டு ஸபா நாட்டு மக்கள் நேர்வழியில் மிகவும் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இறையச்சம் நிறைந்தவர்களாகவும் ஓரிறைக் கொள்கை நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.

பல காலத்திற்குப் பிறகு, பல்வேறு ஆட்சியாளர்களின் மாற்றம் நிகழ்ந்த பிறகு, பல தலைமுறைகள் கடந்துவந்த பிறகு, மக்களும் கற்றுத் தெரிந்ததை மறந்தார்கள்.

ஓரிறைக் கொள்கையைக் கைவிட்டவர்களாக, தர்மம் செய்வதைத் துறந்தவர்களாக, அறமில்லாமல் வாழ்ந்தனர்.

ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடத்தில் அதன் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள்
இருந்தன. மிகவும் வளமிக்க நகரமாக அது திகழ்ந்தது.

இறைவன் அவர்களுக்காக அளித்துள்ள ஆகாரத்திலிருந்து சாப்பிடும்படியும், இறைவனுக்கு நன்றி செலுத்தும்படியும் கூறப்பட்டிருந்த போதனைகளை அவர்கள் மறந்து, நன்றிகெட்டவர்களாக மாறியிருந்தனர்.

இறைவனின் கோபப் பார்வை அவர்கள் மீது திரும்பியது.

மன்னிப்பளிக்கும் இறைவன் பாவமன்னிப்புக் கேட்காமல் புறக்கணிப்பவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான்.

திருக்குர்ஆன் 34:15

- ஜெஸிலா

Similar News