ஆன்மிகம்
ஒருவகையில் நாம் வைக்கும் இந்தப் புனித நோன்பு கூட நாம் அல்லாஹ்வுக்கு செய்யும் நன்றிதான்.
ஒருவகையில் நாம் வைக்கும் இந்தப் புனித நோன்பு கூட நாம் அல்லாஹ்வுக்கு செய்யும் நன்றிதான்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி இவ்வாறு கூறுகிறான்: ‘எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்கே (நற்பயன் உள்ளதாக) ஆகும். எவன் நன்றி மறக்கிறானோ அது அவனுக்கே கேடாகும்’ (27:40).
‘நீங்கள் நன்றி செலுத்தினால் திட்டமாக உங்களுக்கு (என்னருளை) நான் அதிகப் படுத்துவேன். நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடினமானது’ (14:07).
‘அல்லாஹ்வை நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்’ (2:172).
‘(அல்லாஹ்வாகிய) எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு மாறு செய்யாதீர்கள்’ (2:152).
‘அல்லாஹ்வின் அருட்கொடைக்கு, அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் நீங்கள் நன்றி செலுத்துங்கள்’ (16:114).
இப்படியாக நன்றியைக் குறித்த இறைவசனங்கள் நிறையவே உண்டு. அல்லாஹ் நம்மிடம் மிகவும் எதிர்பார்ப்பது சிறிதளவு நன்றியைத் தான்.
நபிகளார் தமது பாதம் வீங்கும் அளவுக்கு தொழுதார்கள். ‘இறைத்தூதரே ஏன் இப்படி?’ என்று கேட்கப்பட்ட போது நபியவர்கள் கூறினார்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?’
மதீனத்துப் பள்ளியைச் சுற்றிலும் அவரவர் வசதிக்கேற்ப சீக்கிரம் பள்ளிக்கு வந்து சேர்வதற்காக வாசல் அமைத்துக் கொண்டனர். நாளடைவில் நுழைவாசல்கள் அதிகரிக்கவே ‘அபூபக்கர்(ரலி)யின் வாசலைத்தவிர அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டார்கள்.
அப்போது நபிகளாரிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது, ‘அன்று ஒருநாள் அவர் என்னுடன் மக்கா நகரில் இருந்து மதீனா நகருக்கு இடம்மாறிச் சென்றபோது தவ்ர் குகையில் இருந்த இருப்புக்கு எதுவும் ஈடாகாது. அந்தச்சிறு நன்றிக்காகத்தான் நான் அவரது வாசலை அடைக்க வேண்டாம் என்று கட்டளையிட்டேன்’ என்றார்கள்.
கவனித்தீர்களா! நபிகளாரின் நன்றி அல்லாஹ்வோடும் சரி, அடியார்களோடும் சரி மிக உயர்ந்த நிலையில்தான் இருந்திருக்கிறது. இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்?
நாம் வாய்திறந்து நன்றி நன்றி என்று சொல்லும் போது அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைகிறான், அடியார்களும் மகிழ்ச்சியடைகின்றனர். புனித ரமலான் நமக்கு அதைத்தான் கற்றுத் தருகிறது.
இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்வோம், நன்றே சொல்லி அனைவரும் உயர்வோம்!
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
இப்தார்: மாலை 6.45 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.06 மணி
அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி இவ்வாறு கூறுகிறான்: ‘எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்கே (நற்பயன் உள்ளதாக) ஆகும். எவன் நன்றி மறக்கிறானோ அது அவனுக்கே கேடாகும்’ (27:40).
‘நீங்கள் நன்றி செலுத்தினால் திட்டமாக உங்களுக்கு (என்னருளை) நான் அதிகப் படுத்துவேன். நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடினமானது’ (14:07).
‘அல்லாஹ்வை நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்’ (2:172).
‘(அல்லாஹ்வாகிய) எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு மாறு செய்யாதீர்கள்’ (2:152).
‘அல்லாஹ்வின் அருட்கொடைக்கு, அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் நீங்கள் நன்றி செலுத்துங்கள்’ (16:114).
இப்படியாக நன்றியைக் குறித்த இறைவசனங்கள் நிறையவே உண்டு. அல்லாஹ் நம்மிடம் மிகவும் எதிர்பார்ப்பது சிறிதளவு நன்றியைத் தான்.
நபிகளார் தமது பாதம் வீங்கும் அளவுக்கு தொழுதார்கள். ‘இறைத்தூதரே ஏன் இப்படி?’ என்று கேட்கப்பட்ட போது நபியவர்கள் கூறினார்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?’
மதீனத்துப் பள்ளியைச் சுற்றிலும் அவரவர் வசதிக்கேற்ப சீக்கிரம் பள்ளிக்கு வந்து சேர்வதற்காக வாசல் அமைத்துக் கொண்டனர். நாளடைவில் நுழைவாசல்கள் அதிகரிக்கவே ‘அபூபக்கர்(ரலி)யின் வாசலைத்தவிர அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டார்கள்.
அப்போது நபிகளாரிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது, ‘அன்று ஒருநாள் அவர் என்னுடன் மக்கா நகரில் இருந்து மதீனா நகருக்கு இடம்மாறிச் சென்றபோது தவ்ர் குகையில் இருந்த இருப்புக்கு எதுவும் ஈடாகாது. அந்தச்சிறு நன்றிக்காகத்தான் நான் அவரது வாசலை அடைக்க வேண்டாம் என்று கட்டளையிட்டேன்’ என்றார்கள்.
கவனித்தீர்களா! நபிகளாரின் நன்றி அல்லாஹ்வோடும் சரி, அடியார்களோடும் சரி மிக உயர்ந்த நிலையில்தான் இருந்திருக்கிறது. இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்?
நாம் வாய்திறந்து நன்றி நன்றி என்று சொல்லும் போது அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைகிறான், அடியார்களும் மகிழ்ச்சியடைகின்றனர். புனித ரமலான் நமக்கு அதைத்தான் கற்றுத் தருகிறது.
இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்வோம், நன்றே சொல்லி அனைவரும் உயர்வோம்!
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
இப்தார்: மாலை 6.45 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.06 மணி