தோஷ பரிகாரங்கள்

கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள் வழிபட வேண்டிய தலை வெட்டி பிள்ளையார்

Published On 2022-12-27 07:39 GMT   |   Update On 2022-12-27 07:39 GMT
  • திண்டுக்கல் மேலக் கோட்டையில் உள்ளது இந்த கோவில்.
  • இந்த கோவிலில் இந்த பரிகாரத்தை செய்தால் திருமண தடைகள் அகலும்.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக் கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.

மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும்.

விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News