தோஷ பரிகாரங்கள்

நீங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்க விநாயகருக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

Published On 2023-06-20 08:25 GMT   |   Update On 2023-06-20 08:25 GMT
  • இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றம் காண முடிகிறது.
  • ஆசைப்பட்ட திருப்தியான வேலை நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.

எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலை கிடைப்பது கிடையாது. மேலும் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருப்பார்கள். மனதிற்கு பிடித்த வேலை செய்யும் பொழுது தான் அந்த வேலையில் இருக்கும் சுமை நமக்கு தெரியாமல் இருக்கும். இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றம் காண முடிகிறது. எனவே நல்ல வேலையும், ஆசைப்பட்ட திருப்தியான வேலை நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி இலையின் மீது அதீத பிரியம் உண்டு. இந்த கற்பூரவள்ளி இலையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது. 9 கற்பூரவள்ளி இலைகளை மாலையாக கோர்த்து பிள்ளையாருக்கு போட்டு வாரம் தோறும் புதன் கிழமையில் வழிபடலாம். ஆசைப்பட்ட வேலை வேண்டி பிரார்த்திப்பவர்கள் புதன்கிழமையில் வழிபடுவது நல்லது.

கற்பூரவல்லி இலைகளுக்கு பதிலாக 9 செவ்வாழை பழங்களை மாலையாக கோர்த்தும் 12 வாரங்கள் விநாயகருக்கு சாற்றி வழிபடலாம். கற்பூரவல்லி இலையை விட செவ்வாழைக்கு அதிக சக்தி உண்டு. இந்த 9 செவ்வாழை பழங்களை இடைவெளி விட்டு நூலில் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள்.

இதை விநாயகப் பெருமானுக்கு மாலையாக போட்டு வாரம் தோறும் புதன்கிழமையன்று வழிபட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

இது போல நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் செய்து வரும் பொழுது 12 வாரத்திற்குள் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வேலை தேடி ஒவ்வொரு வாரமும் நேர்காணலுக்கு சென்று அலைந்து, திரிந்து, ஓய்ந்து போனவர்களுக்கு விநாயகப் பெருமான் நல்லாசி வழங்குகிறார்.

வாரம் தோறும் விரதம் இருந்து அசைவ உணவு எடுத்துக் கொள்ளாமல் பிள்ளையாரை முழுமனதாக ஏற்று நம்பி இந்த 9 செவ்வாழை பழ

மாலையை சாற்றி உண்மையான பக்தியுடன் மனதிற்குள் வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் எதிர்பார்த்த வேலையும், இஷ்டப்பட்ட வேலையும் மன நிறைவுடன் உங்களுக்கு கிடைக்கும்.

Tags:    

Similar News