ஆன்மிகம்
இறைவழிபாடும்- தீரும் பிரச்சனைகளும்

இறைவழிபாடும்- தீரும் பிரச்சனைகளும்

Published On 2020-02-04 05:11 GMT   |   Update On 2020-02-04 05:11 GMT
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்னவென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இறைவழிபாடு நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வலிமை கொண்டது. எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்னவென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

* ஞாயிறு: கண்ணுக்குத் தென்படும் கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.

* திங்கள்: சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

* செவ்வாய்: முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று, ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

* புதன்: பெருமாளை சேவிப்பதற்கு ஏற்ற தினம். துளசி மாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.

* வியாழன்: நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பெரியவர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நலன்களைப் பெற்றுத்தரும்.

* வெள்ளி: மகாலட்சுமி வழிபாடு நன்மைதரும். கோ-பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மகாலட்சுமி ஸ்தோத்ரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

* சனி: ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு சிறப்பான நாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறியவும் இது ஏற்ற தினங்கள் ஆகும்.

* விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.

பொ.பாலாஜிகணேஷ்
Tags:    

Similar News