ஆன்மிகம்
பெரியபிரான்

செவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் பெரியபிரான்

Published On 2020-01-25 01:39 GMT   |   Update On 2020-01-25 01:39 GMT
கோடகநல்லூர் பெரியபிரான் ஆலயத்தின் பின்புறத்தில் நீண்ட படித்துறை உள்ளது. இங்கு ஸ்நானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி தடைப்பட்ட திருமணம் நடைபெறும்.
தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்த தலங்களில் ஒன்று, கோடகநல்லூர் பெரியபிரான் கோவில். கார்கோடகன் என்ற நாகத்தின் பாவத்தைப் போக்கிய மகாவிஷ்ணு இங்கு பெரிய பிரானாக வீற்றிருக்கிறார். எனவே தான் செவ்வாய் தோஷம் நீங்க, இங்கு பக்தர்கள் பலரும் விசேஷ பிரார்த்தனை செய்து பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக ராகு, கேது தோஷம் நீங்க மக்கள் இங்கு வந்து வணங்கி நலம்பெறுகின்றனர்.

இந்த ஆலயத்தின் பின்புறத்தில் நீண்ட படித்துறை உள்ளது. இங்கு ஸ்நானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். கல்விச்செல்வம் பெருகும் என்கிறார்கள். எல்லா வளமும் கிடைக்க தாமிரபரணி ஆற்றின் கரையில் அமர்ந்து, பெரியபிரான் நமக்கெல்லாம் அருள் வழங்கிக் கொண்டு இருக்கிறார். திருநெல்வேலியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கோடகநல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.
Tags:    

Similar News