ஆன்மிகம்
அரசின் விதிகளுக்குட்பட்டு சவேரியார் பேராலயத்தின் தேர்பவனி
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் பவனியை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமான முறையில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அரவிந்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி 3 நாட்கள் நடைபெறும். இந்த 3 நாட்கள் நடைபெறும் தேர் பவனியை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமான முறையில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து தேர்பவனி தொடர்பாக சுரேஷ்ராஜன் மனு அளித்தார். அப்போது மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி உள்பட பலர் உடன் வந்தனர்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி 3 நாட்கள் நடைபெறும். இந்த 3 நாட்கள் நடைபெறும் தேர் பவனியை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமான முறையில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து தேர்பவனி தொடர்பாக சுரேஷ்ராஜன் மனு அளித்தார். அப்போது மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி உள்பட பலர் உடன் வந்தனர்.