ஆன்மிகம்
கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

Published On 2021-08-03 09:40 IST   |   Update On 2021-08-03 09:40:00 IST
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பெருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானல் நகரில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு 14, 15-ந்தேதிகளில் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பெருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வழக்கமாக ஆகஸ்டு 1-ந்தேதி கொடி ஊர்வலம் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நடைபெறுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு கொடியேற்றம் அரசு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடைபெற்றது. இதற்காக புனித சலேத் அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருமாள்மலை பங்குத்தந்தை பிரிட்டோ சுரேஷ் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

Similar News