ஆன்மிகம்
தவக்கால சிந்தனை: இயேசுவின் முகவரி
இயேசுவே இவ்வீட்டின் தலைவர், என் உள்ளமும், என் வீடும் தான் இயேசுவின் முகவரி என்று சிந்தித்து செயல்படுங்கள். கடவுள்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
இன்றைய உலகத்தில் நம்முடைய கஷ்டங்களுக் காக கடவுள் எங்கே இருக்கிறார்? நம்முடைய கஷ்டங்களை தீர்க்க மாட்டாரா? என்று ஏங்கி தவித்துக்கொண்டிருக் கும் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இயேசுவின் முகவரி எங்கு உள்ளது? என்று நாம் சற்று சிந்திப்போம்.
தற்போது ஒருவர் வந்து நம்மிடத்தில் இயேசு எங்கே இருக்கிறார்? என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்ல முடியும். இயேசு என் உள்ளத்தில் இருக்கிறார் அல்லது எங்கள் வீட்டில் இருக்கிறார் என்றா சொல்ல முடியும். இப்படியாக சிந்தித்து கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளே இயேசுவானவர் வேதாகமத்தில் என்ன சொல்லுகிறார் என்றால் யோவான் 14-ம் அதிகாரம் 23-ம் வசனத்தில் இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தை கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
அன்பான தேவ பிள்ளைகளே நம் வீடுகளில் ‘இயேசுவே இவ்வீட்டின் தலைவர்’ என்று வாசல் கதவில் அலங்காரமாக வைத்து விட்டு, வீண் சிந்தனைகள், கணவன்-மனைவி சண்டை, பிள்ளைகளிடம் கோபம், எரிச்சல் போன்ற மனஸ்தாபங்களோடு வாழ்ந்து கொண்டு சாத்தான் நம் வரவேற்பறையில் தங்குவதற்கு நாம் இடம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இதைத்தான் வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்த்தால் ஆதியாகமம் 4-ம் அதிகாரம் 7-ம் வசனத்தில் நீ, நன்மை செய்யாதிருந்தால் பாவம் உன் வாசற்படியில் படித்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் மனஸ்தாபங்களோடு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்கிறவர்களாய் இருப்போமேயானால், இயேசுவின் முகவரியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் வீட்டின் வாசலிலும் இப்படி வாசகத்தை எழுதி வைத்துள்ளர்களா? இப்போதே இந்த தவக்காலத்தில் தீர்மானம் செய்யுங்கள். இயேசுவே இவ்வீட்டின் தலைவர், என் உள்ளமும், என் வீடும் தான் இயேசுவின் முகவரி என்று சிந்தித்து செயல்படுங்கள். கடவுள்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
பாஸ்டர். சாம் கிப்ட்சன், நற்செய்தி ஊழியம், காங்கேயம்.
தற்போது ஒருவர் வந்து நம்மிடத்தில் இயேசு எங்கே இருக்கிறார்? என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்ல முடியும். இயேசு என் உள்ளத்தில் இருக்கிறார் அல்லது எங்கள் வீட்டில் இருக்கிறார் என்றா சொல்ல முடியும். இப்படியாக சிந்தித்து கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளே இயேசுவானவர் வேதாகமத்தில் என்ன சொல்லுகிறார் என்றால் யோவான் 14-ம் அதிகாரம் 23-ம் வசனத்தில் இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தை கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
அன்பான தேவ பிள்ளைகளே நம் வீடுகளில் ‘இயேசுவே இவ்வீட்டின் தலைவர்’ என்று வாசல் கதவில் அலங்காரமாக வைத்து விட்டு, வீண் சிந்தனைகள், கணவன்-மனைவி சண்டை, பிள்ளைகளிடம் கோபம், எரிச்சல் போன்ற மனஸ்தாபங்களோடு வாழ்ந்து கொண்டு சாத்தான் நம் வரவேற்பறையில் தங்குவதற்கு நாம் இடம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இதைத்தான் வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்த்தால் ஆதியாகமம் 4-ம் அதிகாரம் 7-ம் வசனத்தில் நீ, நன்மை செய்யாதிருந்தால் பாவம் உன் வாசற்படியில் படித்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் மனஸ்தாபங்களோடு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்கிறவர்களாய் இருப்போமேயானால், இயேசுவின் முகவரியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் வீட்டின் வாசலிலும் இப்படி வாசகத்தை எழுதி வைத்துள்ளர்களா? இப்போதே இந்த தவக்காலத்தில் தீர்மானம் செய்யுங்கள். இயேசுவே இவ்வீட்டின் தலைவர், என் உள்ளமும், என் வீடும் தான் இயேசுவின் முகவரி என்று சிந்தித்து செயல்படுங்கள். கடவுள்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
பாஸ்டர். சாம் கிப்ட்சன், நற்செய்தி ஊழியம், காங்கேயம்.