ஆன்மிகம்

திட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா

Published On 2019-02-21 04:18 GMT   |   Update On 2019-02-21 04:18 GMT
திட்டுவிளையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
திட்டுவிளையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு ஜெபமாலையும், மாலை 6.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கனடா நாட்டை சேர்ந்த பேரருட் பணியாளர் மார்சலின் டி போரஸ் கொடியேற்றி வைக்கிறார். அமெரிக்க நாட்டை சேர்ந்த பேரருட் பணியாளர் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

மார்ச் 2-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு நாஞ்சில் நாதம் இயக்குனர் செல்வன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியை தொடர்ந்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழு இயக்குனர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். காரியாங்கோணம் சாந்தி ஆசிரம நிர்வாகி அருட்பணியாளர் கிறிஸ்பின் ஆச்சாரியா அடிகளார் ஜெபம் நடத்துகிறார். பகல் 2 மணிக்கு தேர்பவனி இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.
Tags:    

Similar News