ஆன்மிகம்

புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை தொடங்குகிறது

Published On 2018-08-29 03:12 GMT   |   Update On 2018-08-29 03:12 GMT
கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்லம் அருட்பணியாளர் மார்சலின் டி போரஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருளானந்தம் அருளுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி மற்றும் பங்கு மக்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

4-ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, 8-ம் திருவிழாவன்று மாலையில் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு தாழையான்கோணம் பங்கு தந்தை சூசை தலைமை தாங்குகிறார். மார்த்தால் பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி நடக்கிறது.

9-ம் திருவிழாவன்று காலை 6.30 மணி முதல் திருவிருந்து திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். புனித ஜெரோம் கல்லூரி ஆக்னஸ் அமலன் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு புனித வளனார் தேர்பவனியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஜெபமாலைக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். புனித ஞானப்பிரகாசியார் இளம் குருமடம் ஜெரி வின்சென்ட் அருளுரையாற்றுகிறார். இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

10-ம் திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதற்கு சின்னவிளை பங்குதந்தை ஆன்றனி கிளாரட் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்லம் அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட் சகோதரிகள், பங்குதந்தை அந்தோணி பிச்சை செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News