ஆன்மிகம்
ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி

Published On 2018-06-22 09:04 IST   |   Update On 2018-06-22 09:04:00 IST
நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 17-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து தினசரி கூட்டு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்று வந்தது. 18-ந்தேதி மாலையில் நவநாள் திருப்பலியும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனியையொட்டி வெள்ளக்குளம் அருட்தந்தைகள் ஆரோக்கிய ஜான் ராபர்ட், ரெஜிஸ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித அந்தோணியார், மாதா, ஏசு ஆகியோரது சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.

தேரை கிறிஸ்தவர்கள் தோளில் சுமந்தபடி, கடலூர் மெயின்ரோடு, நெய்வேலி மேம்பாலம் வழியாக பவனியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தனர். இதில் விருத்தாசலம், நெய்வேலி, டவுன்ஷிப், வடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News